சில ரயில்வே மார்க்கங்களினூடான திட்டமிடப்பட்ட 14 ரயில் சேவைகள் இன்றைய தினம் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது.
மருதானை ரயில் நிலையத்தின் ரயில்வே கட்டுப்பாட்டாளர் சேவை பிரிவில் 5 பேர் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 17 பேர் அவர்களுடன் தொடர்புக் கொண்டுள்ளார்கள். ரயில்வே நிலைய கட்டுப்பாட்டு சேவையில் மாத்தறை பகுதியில் 3 ரயில்வே நிலைய கட்டுப்பாட்டாளர்களும், மஹவயில் ஒருவரும், கண்டியில் 07 பேரும், நாவலபிடியில் 05 பேரும், அநுராதபுரத்தில் ஒருவரும், மட்டக்களப்பில் ஒருவரும், அளுத்தம பகுதியில் மூவரும் கொவிட் வைரஸ் தொற்றாளர்களாகவும் அல்லது தொற்றாளர்களுடன் தொடர்புக் கொண்டவர்களாகவும் அடையாளங்காணப்பட்டதை தொடர்ந்து சுகயீன விடுமுறையின் அடிப்படையில் விடுமுறையில் உள்ளார்கள்.
விசேடமாக கொழும்பு வலயத்தில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் இல்லாத காரணத்தினால் பிரதான ரயில் வீதியில் 06 ரயில் பயண சேவையும், கரையோர ரயில் பாதையில் 02 புகையிரத பயண சேவையும், புத்தளம் வீதியில் 03 ரயில் பயண சேவையும், களனி வழி பாதையில் 2 ரயில் சேவையும், வடக்கு ரயில் வீதியில் குருணாகல் வரை சேவையிலான 14 பயணிகள் ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM