(குடந்தையான்)
கொரோனா தொற்று பரவலால் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழகத்தில், உச்சநீதிமன்ற உத்தரவின் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. உள்ளது.
இதனால் திட்டமிட்டபடி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முழுமையான வெற்றியை பெற்று தி.மு.க. ஆதிக்கம் செலுத்துமா? இல்லையா? என்பதுதான் தற்போதைய விவாதப் பொருளாக உருவாகியிருக்கிறது.
'நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஐபேக் குழுவினர் மற்றும் உளவுத் துறையினர் மூலமாக தயாரித்து, பட்டியலை தயாராக வைத்திருக்கிறார்கள்.
இந்தமுறை உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்காலத்தில் கட்சியில் ஆதரவு அதிகரிக்கும் வகையில் ஏராளமான புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
புகார்களுக்கு ஆளாகாத உறுப்பினர்களில் சிலருக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் பொங்கலுக்கு வழங்கப்பட்ட சிறப்பு தொகுப்பில் ஏற்பட்ட குளறுபடிகள், பொங்கலுக்கு பிறகு வழங்கப்படும் பொங்கல் சிறப்பு தொகுப்புகள், எரிவாயுவுக்கு இலவச மானியம் பெண்களுக்கு உரிமைத் தொகை என்பவற்றால் டெல்டா, கொங்கு மண்டலங்கள் ஆகியவற்றில் தி.மு.க.வின் வெற்றி பாரிய அளவில் பாதிக்கப்படலாமென எதிர்வு கூறப்படுகின்றது.
ஆளும் கட்சியான தி.மு.க. மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை, நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குகளாக அறுவடை செய்ய வேண்டிய அ.தி.மு.க., கூட்டணி கட்சியான பா.ஜ.க.வுடன் தொகுதி உடன்பாட்டில் இணக்கமான நிலையை உருவாக்காததால் அக்கட்சியின் வாக்குகளை எளிதாக திசை திருப்பும் நடவடிக்கைகளில் ஆளுங்கட்சியான தி.மு.க. ஈடுபடக்கூடும்.
இதனைவிட, விஜய் மக்கள் இயக்கம், ரஜினி இரசிகர் மன்றம் ஆகியவையும் தேர்தல் களத்தில் குதித்திருக்கிறது. இவற்றில் விஜய் மக்கள் இயக்கத்திற்கு சிறுபான்மை மக்களிடையே பாரிய ஆதரவு இருப்பதால், இந்த முறை எதிர்பார்த்ததைவிட கூடுதல் இடங்களில் அவ்வணியினர் தெரிவாகும் நிலைமைகள் ஏற்படலாம்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-30#page-6
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM