தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவின் வாகனம் மீது சிலர் முட்டை வீசி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை 30 ஆம் திகதி கலகெடிஹேன தனியார் விருந்துபசார மண்டபத்தில் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, மண்டபத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் வந்திருந்தபோது அங்கு கூடியிருந்த சிலர் அவரது கார் மீது முட்டைகளை வீசினர்.
கம்பஹா மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த கட்சி ஆதரவாளர்கள் தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர்கள் இருவரை பிடித்து நிட்டம்புவ பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இவ்வாறு தாக்குதலை மேற்கொள்ள தம்முடன் சுமார் 16 பேர் வந்திருந்ததாக சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. இந்நிலையில், ஏனையோர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM