(எம்.மனோசித்ரா)
தொழிற்சங்கங்களை அடக்குவதற்கும், வேலை நிறுத்தங்களை தடுக்கவும் அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாக கண்டிப்பதோடு , இதற்கு எதிராக இலக்கணக்கான மக்களுடன் வீதிக்கு இறங்கி போராடுவதற்கும் தயாராகவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கெக்கிராவ பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
நாட்டின் வளங்களை நடு இரவில் விற்கும் அரசாங்கம், தொழிலாளர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மக்கள் பக்கமே நிற்கும். கடந்த தேர்தல் மேடைகளில் எமது எதிர்தரப்பு வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய போலியான வாக்குறுதிகளை நம்பி பெருமளவான மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் தொழிற்சங்க நடவடிக்கைகளை தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அறியக்கிடைத்துள்ளது. இது முற்றிலும் ஜனநாயகத்திற்கு முரணான நடவடிக்கை ஆகும். இந்த நடவடிக்கைகள் ஊடாக நாட்டுக்குள் பேசுவதற்குக் கூட தடையை விதிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.
நாட்டு மக்களுக்கு ஜனநாயக உரிமையும் சுதந்திரமும் காணப்படுகிறது. அதனை முடக்குவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM