நாட்டை முடக்கினால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முடியாது - பிரசன்ன ரணதுங்க

Published By: Digital Desk 4

30 Jan, 2022 | 06:56 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஒப்பீட்டளவில் சீர்செய்துள்ளோம்.

கொவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாட்டை மீண்டும் முடக்கினால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப முடியாது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சீனாவில் இருந்து கொண்டுவரப்படும் உணவுகள் தொடர்பில் கூடிய கவனம் : பிரசன்ன  ரணதுங்க | Virakesari.lk

குடிசைக் கைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மினுவாங்கொட தொகுதியில் உள்ள 90 குடிசைக்கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு 71 இலட்சம் பெறுமதியான கைத்தொழில் உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் தாக்கத்தை தொடர்ந்து வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளதால் நடைமுறையில் பல பிரச்சினைகளை எதிர்க்கொண்டுள்ளோம்.

எரிபொருள், மின்சாரம், சமையல் எரிவாயு ஆகிய அத்தியாவசிய சேவையினை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு வெளிநாட்டு கையிருப்பு பிரச்சினை பிரதான காரணியாக அமைகிறது.

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் கடந்த இரண்டாண்டு காலமாக அதிக நிதியை செலவிட்டுள்ளது.நெருக்கடியான சூழ்நிலையிலும் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தலுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் தாக்கம் இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட பிரச்சினையல்ல பலம் வாய்ந்த நாடுகள் கூட கொவிட் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 30வருட கால சிவில் யுத்தத்திலிருந்து நாட்டையும்,நாட்டு மக்களையும் பாதுகாத்ததை போன்று ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ கொவிட் தாக்கத்திலிருந்து நாட்டையும்,நாட்டு மக்களையும் பாதுகாத்துள்ளார்.

பொருளாதாரம் பாதிப்பிற்கு தற்போது முதலைக்கண்ணீர் வடிக்கும் எதிர்க்கட்சியினர் கொவிட் தடுப்பூசி செலுத்தல் திட்டத்திற்கு எதிராகவும் பல விமர்சனங்களை முன்வைத்தார்கள்.

தாக்கத்தை தீவிரப்படுத்த அதனூடாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ள எதிர்தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.

நாட்டை முடக்கும் நோக்கத்தில் தற்போது ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் 3 ஆம் கட்ட பூஸ்டர் தடுப்பூசிக்கு எதிராக போலியான பிரசாரங்களை முன்னெடுத்து செல்கிறார்கள்.

நாட்டை மீண்டும் முடக்கினால் பொருளாதார பாதிப்பிலிருந்து ஒருபோதும் மீள முடியாது.நெருக்கடியான நிலைமையில் இருந்து மீள்வதற்கு பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22