(நெவில் அன்தனி)
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்தாட்டத்தில் பங்குபற்றும் வட மாகாண அணி இன்று தனது சொந்த மண்ணில் விளையாடவுள்ளது.
வட மாகாணத்தைச் சேர்ந்த வீரர்களை மாத்திரம் கொண்ட இந்த அணி, துரையப்பா விளையாட்டரங்கில் ஊவா மாகாண அணியை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகும் போட்டியில் சந்திக்கவுள்ளது.
குருநாகலில் நடைபெற்ற சப்ரகமுவ மாகாண அணிக்கு எதிரான போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட ஜூட் சுபன் தலைமையிலான வட மாகாண அணி, தனது சொந்த மண் இரசிகர்கள் முன்னிலையில் வெற்றிபெறவேண்டும் என்ற கங்கணத்துடன் களம் காணவுள்ளது.
தனது முதல் போட்டியில் ஏகப்பட்ட கோல் போடும் வாய்ப்புகளை ஏற்படுத்திய வட மாகாண அணி அவற்றை கோலாக்குவதில் தவறியது.
எனவே இன்றைய போட்டியில் உள்ளூர் இரசிகர்களை திருப்தியில் ஆழ்த்தும் வகையில் வட மாகாண அணி வெற்றிபெற முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மறுபுறத்தில் வட மத்திய மற்றும் வட மேல் கூட்டு அணியை (ரஜரட்ட) வெற்றிகொண்ட எம். ஷிபான் தலைமையிலான ஊவா மாகாண அணி, மற்றொரு வெற்றியைக் குறிவைத்து இன்று களம் காணவுள்ளது.
இதேவேளை, கிழக்கு மாகாண அணிக்கும் வட மத்திய மற்றும் வட மேல் கூட்டு மாகாண அணிக்கும் இடையிலான போட்டி அரியாலையில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM