(எம்.எம்.சில்வெஸ்டர்)
நாட்டில் கொரோன வைரஸ் தொற்று மீண்டும் தலை தூக்குவதற்கு சுகாதார அமைச்சின் தவறான வழிக்காட்டதல்களே காரணம். கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வை நாட்டுக்குள் வருவதை தடுப்பதற்கு சுகாதார அமைச்சு சரியான வழிக்காட்டுத்தல்களை நடைமுறைப்படுத்த தவறியமையே இதற்கு காரணம் என மருத்துவ ஆய்வக அறிவியல் கல்வியகத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
டெல்டா, ஒமிக்ரோன் உள்ளிட்ட ஏதேனும் வைரஸ் தொற்றுக்கள் நாட்டினுள் வருவதை தடுப்பதற்கு மிகவும் இலகுவான வழிவகைகள் இருந்தபோதிலும், சுகாதார அமைச்சு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததன் காரணமாக நாட்டினுள் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றானது மிகவும் வேகமாக பரவி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில்,
"தற்போது கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எல்லை கடந்து சென்றுள்ளது.பி.சி.ஆர். அல்லது என்டிஜன் பரிசோதனை வசதிகள் இல்லை.
சுகாதார அமைச்சில் காணப்படுகிற பிரச்சினைகள் தொடர்பாக கலந்தாலோசிப்பதது இல்லை. நாம் கூறுவதை கேட்பதற்கும் ஆளில்லை.
டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில்தான் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதலாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்.
தடுப்பூசிகளை ஏற்றியிருக்காத தம்பதியினரே இலங்கைக்கு ஒமிக்ரோன் வைரஸ் தொற்றை கொண்டு வந்தனர். விமான நிலையத்தில் கடுமையான சட்டங்களை இலகு படுத்தியதன் காரணமாகவே இவ்வாறு நடந்தது.
இதன் பின்னர், கெசினோ விளையாட வந்த இந்தியர்கள் ஒமிக்ரோன் தொற்றுடன் முழு நாட்டையும் சுற்றித் திரிந்தனர்.
எவரும் எதுவித பரிசோதனைகளையும் செய்யவில்லை. இதனால் இன்று முழு நாட்டிலும் ஒமிக்ரோன் தொற்று அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது" என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM