(ஏ.என்.ஐ)
ஆப்கானிஸ்தானில் உருவாகி வரும் சூழ்நிலை மாற்றம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தாக்கங்கள் குறித்து இந்தியா உட்பட ஐந்து மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்களும் கலந்துரையாடினர்.
இதன் போது மூத்த அதிகாரிகள் மட்டத்திலான ஒரு கூட்டு பணிக்குழுவை நிறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியால் நடத்தப்பட்ட முதல் இந்தியா-மத்திய ஆசிய உச்சி மாநாட்டில் மெய்நிகர் வடிவில் இடம்பெற்றது.
கஜகஸ்தான் ,உஸ்பெகிஸ்தான் , தஜிகிஸ்தான் , துர்க்மெனிஸ்தான் குர்பாங்குலி குடியரசு மற்றும் குர்பாங்குலி பெர்டிமிர்பாங்குலி குடியரசு ஆகியன பங்குப்பற்றின.
ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் அதன் தாக்கம் குறித்து தலைவர்கள் இதன் போது விவாதித்தனர்.
அமைதியான, பாதுகாப்பான மற்றும் நிலையான ஆப்கானிஸ்தானுக்கு வலுவான ஆதரவை தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
அதே நேரத்தில் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை மற்றும் அதன் உள் விவகாரங்களில் தலையிடாமை போன்ற விடயங்கள் குறித்தும் கருத்தில் கொள்ளப்பட்டது.
தற்போதைய மனிதாபிமான நிலை குறித்தும் கவனத்தில் கொள்ளப்பட்ட நிலையில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்க முடிவு செய்தனர்.
ஐ.நா பாதுகாப்பு சபையின் 2593 (2021) தீர்மானத்தில் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
இது ஆப்கானிஸ்தான் பிரதேசத்தை பயங்கரவாத செயல்களுக்கு , தங்குமிடாமக, பயிற்சி, திட்டமிடல் அல்லது நிதியுதவி செய்ய பயன்படுத்தக்கூடாது என்பதே இந்த தீர்மானத்தின் உள்ளடக்கமாகும்.
இதனடிப்படையில் ஆப்கானிஸ்தான் தொடர்பான பிரச்சினைகளில் பரந்த பிராந்திய ஒருமித்த கருத்து உள்ளது என்றும் தலைவர்கள் குறிப்பிட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM