நாடியின் இசைச் சங்கமம் - பாடல் வெளியீடு

28 Jan, 2022 | 04:20 PM
image

நாடி பெருமையுடன் வழங்கிய 'இசை சங்கமம்' பாடல் வெளியீட்டு நிகழ்வு கடந்த 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு சிட்டி செண்டரில் அமைந்துள்ள ஸ்கோப் சினிமாவில் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றது.  

தெரண தொலைக்காட்சி நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட  தொலைக்காட்சி நாடகங்களில் மில்லியன் கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்திய நான்கு பாடல்கள் இந்த நிகழ்வின் போது eTunes.lk தளத்தில் உத்தியோகபூர்வமாக தமிழ் மொழியில்  வெளியிடப்பட்டது. 

சதுரங்கன டி சில்வா மற்றும் நிமேஷ் குலசிங்க ஆகியோரின் அசத்தலான இசையில், கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய இளமை ததும்பும் வரிகளில் இந்த நான்கு பாடல்களும்  வெளியிடப்பட்டமை ஒரு சிறப்பம்சமாகும். 

'இசை சங்கமம்' பாடல் வெளியீட்டு நிகழ்வில் வெளியிடப்பட்ட 'நிலவா நட நடந்து...' என்ற பாடலை இலங்கையின் பாடகர் ஷாதிர் அஹமட் பாடியுள்ளார். 

'மொட்டு விட்ட பூங்கொடி...' பாடலை பாடகர் கோகுலன் ஷாந்தனுடன் இணைந்து சுதர்ஷினி பாடியுள்ள  அதேவேளை 'நானாக நானும் இல்லை...' பாடலை சுதர்ஷினியுடன் இணைந்து குகனேஷ்வரன் பாடியுள்ளார். 

மேற்குறிப்பிட்ட மூன்று பாடல்களையும் சதுரங்கன டி சில்வா இசை அமைத்திருந்தார். 

இசை சங்கமத்தினை புகழ்பெற்ற தொலைக்காட்சி அறிவிப்பாளர்களான சரவணபவன் மற்றும்  சத்யப்பிரியா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். 

தெரண தொலைக்காட்சியின் சந்தைப்படுத்தல்  முகாமையாளர் லக்மல் முதலிகே , சிரேஷ்ட தமிழ்க் கலைஞர்களான முத்தழகு, மஹிந்த குமார், டிரோன் பெர்னாண்டோ, கிங் ரட்ணம் ஆகிய அதிதிகள் உட்பட தொலைக்காட்சி நாடகக் கலைஞர் தர்ஷன் மற்றும் சமூக ஊடகப் பிரபலங்களான ஜீவிதன், ஆதில் ஒஸ்மான்,  பூர்விகா ராசசிங்கம் ஆகியோருடன் யாழ்ப்பாண திருநர் வலையமைப்பின் நிறுவனர் ஏஞ்சலும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். 

இசை சங்கமத்தில் தமிழில் வெளியிடப்பட்ட பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே சிங்கள மொழியில் தெரண தொலைக்காட்சியின் பெரும் பொருட்செலவில் காணொளிகளாக வெளியிடப்பட்ட பாடல்கள் ஆகும். 

'நானாக நானும் இல்லை...' என்ற பாடல் சிங்கள மொழியில் வெளிவந்த 'ஹதகாரி' என்ற டூயட் பாடலாகும். 

'நிலவா நட நடந்து...' என்ற பாடல் 'விதுலி கொட்டய்' என்று சிங்கள மொழியில் வெளிவந்த பாடலாகும். 

'மலென் உபன் ஸமநலி' என்ற சிங்கள மொழிப் பாடல் 'மொட்டு விட்ட பூங்கொடி...' என்று தமிழில் வெளியிடப்பட்டது. 

'துள்ளி எழுந்திடு தோழா...' என்பது 'வல்லென் தெலட மவாலா' என்று சிங்களத்தில் வெளிவந்திருந்த பாடல் ஆகும். 

மேலும் இப்பாடல்களை eTunes.lk தளத்தில் நீங்கள் கேட்டும், பார்த்தும் மகிழலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56