பிரான்ஸில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ரஷ்யா, உக்ரைன், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட நிலையில் ரஷ்யா- உக்ரைன் இடையில் போர் நிறுத்தம் தொடர முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோவியத் ஒன்றியத்தின் ஒரு அங்கமாக இருந்து வந்த உக்ரைன், கடந்த 1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின் தனிநாடாக உருவானது.
கலாசார ரீதியிலும் சமூக ரீதியிலும் ரஷ்யாவோடு பல தொடர்புகளைக் கொண்டுள்ள உக்ரைனில் இப்போதும் ரஷ்ய மொழி பேசுவோர் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த சூழலில் அமெரிக்கா, கனடா மற்றும் 27 ஐரோப்பிய நாடுகளின் இராணுவ கூட்டமைப்பான நேட்டோ உக்ரைனை தன்னுடன் இணைத்துகொள்ள விரும்புகிறது.
ஆனால் தனது எல்லையையொட்டி அமைந்துள்ள உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் தங்களது தேசியப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என ரஷ்யா கருதுகிறது.
இதையடுத்து உக்ரைனை தங்களது அமைப்பில் இணைக்க மாட்டோம் என நேட்டோ உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தி வருகிறது.
இந்த வலியுறுத்தலுக்கு நேட்டோ அமைப்பு மற்றும் அமெரிக்கா உடன்படாததால் உக்ரைன் எல்லையருகே சுமாா் ஒரு இலட்சம் படையினரை ரஷ்யா நிலைநிறுத்தியுள்ளது.
உக்ரைன் மீது படையெடுத்து அந்த நாட்டை தன்னுடன் இணைத்துக் கொள்வதற்காக ரஷ்யா படை குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து உக்ரைன், ரஷ்யா பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் கிழக்கு உக்ரைனில் போர் நிறுத்த நடவடிக்கைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM