(எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டில் கொவிட் தொற்று தீவிரமாக பரவி வருகின்றது. இந் நிலை தொடருமானால் நீண்ட காலம் செல்வதற்கு முன்னர் சமூகத்தில் பயங்கரமானதொரு நிலை ஏற்படும் என அங்கொடை தொற்று நோய் நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.
தற்போது அதிகமானவர்கள் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை மறந்து செயற்படுகின்றனர். விசேடமாக திருமண நிகழ்வுகள் உட்பட அதிகமான வைபவங்களுக்கு சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டிருக்கும் பரிந்துரைகள் முறையாக பின்பற்றப்படுவதை காணக்கூடியதாக இல்லை.
திருமண நிகழ்வு உட்பட பல்வேறு வைபவங்களுக்கு அதிகமான மக்கள் கலந்துகொள்வது பிரச்சினைக்குரிய விடயமாகும்.
அத்துடன் இவ்வாறு வைபவ நிகழ்வுகளுக்கு அதிகமான எண்ணிக்கையிலானவர்கள் கலந்துகொள்வது, ஒமிக்ரோன் வகை வைரஸ் பரவி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக இருக்கலாம்.
அதனால் மக்கள் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு செயற்படவேண்டும் என்பதுடன் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த கொவிட் தடுப்பூசியின் 3 ஆவது டோஸையும் விரைவாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM