தம்புத்தேகம – தேக்கவத்த பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பாடசாலை மாணவி ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் ஒன்று 26 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
13 வயதுடைய சிறுமியே இவ்வாறு தாயாரால் பாதுகாக்கப்பட்டு உயிர் தப்பியுள்ளார்.
குறித்த சிறுமியின் பாட்டியின் வீட்டிற்கு காட்டு யானை ஒன்று வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தனது தாயாருடன் அங்கு சென்றுள்ளார்.
பின்னர் தாய் பாட்டியின் வீட்டில் இருந்துள்ள நிலையில் சிறுமி பாடசாலைக்கு செல்வதற்காக தனது வீட்டை நோக்கி சென்றுள்ளார்.
இதன் போது திடீரென எதிரே வந்த காட்டு யானை சிறுமியை துரத்தியுள்ளது.
மேலும் சிறுமியின் கூக்குரலை கேட்டு அப் பகுதியை நோக்கி விரைந்த தாயும் பாட்டியும் சிறுமியை பாதுகாத்துள்ளனர்.
தனது மகளை யானை தும்பிக்கையால் தாக்கியதாகவும் , இதன் போது அவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் யானையிடமிருந்து தனது மகளை பாதுகாத்ததாகவும் சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM