உலகில் நிலவுகின்ற வறுமையினை ஒழிக்கவும், சுற்றுச்சூழலைக் பாதுகாக்கவும் இணைந்து பாடுபடப்போவதாகப் திருதந்தை பிரான்ஸ் மற்றும் அங்கிலிகன் திருச்சபைத் தலைவர் ஜஸ்டின் வெல்பியும் (Justin Welby) அறிவித்துள்ளனர்.
ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ், அங்கிலிகன் திருச்சபைத் தலைவர் ஜஸ்டின் வெல்பி ஆகியோர் இத்தாலி தலைநகர் ரோமில் சந்தித்துப் பேசியுள்ளனர். அதன்பின் கூட்டறிக்கை வெளியிட்ட அவர்கள் ஏழைகளுக்கு உதவுவதிலும், சுற்றுச்சூழலைக் பாதுகாப்பதிலும் இரு திருச்சபைகளும் இணைந்து செயல்படத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
1534ஆம் ஆண்டுக்குப் பின் இரு சபைகளுக்கிடையிலும் தொடர்பின்றி இருந்த நிலையில் 1966ஆம் ஆண்டு அங்கிலிகன் திருச்சபைத் தலைவர் மைக்கேல் ராம்சே, அப்போதைய திருத்தந்தையான 6 ஆம் போலைச் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் அங்கிலிகன் திருச்சபையின் கீழ் எட்டரைக் கோடிப் பேரும், ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் கீழ் 120 கோடிப் பேரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM