(சிவலிங்கம் சிவகுமாரன்)
பாராளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையிருந்தால் அதை வைத்துக்கொண்டு எதையும் செய்து விடலாம் என எந்த அரசாங்கமும் முடிவுக்கு வரமுடியாது.
பாராளுமன்றத்துக்கு வெளியே அந்த பெரும்பான்மை அரசாங்கத்துக்கு இருக்கின்றதா என்பது தான் அவசியம்.
தற்போது ஆட்சியிலிருக்கும் பொதுஜன முன்னணி அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்துக்கு வெளியே எந்தளவுக்கு ஆதரவு இருக்கின்றது என்பதை வாக்களித்த மக்களும் அறிவர், அரசாங்கமும் அறியும்.
ஆனால் எதற்கெடுத்தாலும் 69 இலட்சம் மக்கள் தனக்கு வாக்களித்தார்கள் என ஜனாதிபதி கூறுகின்றார்.
மூன்றிலிரண்டு பெரும்பான்மை தமக்கு பாராளுமன்றில் உள்ளது என பிரதமர் உட்பட ஏனைய அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.
அப்படியானால் ஏன் ஜனாதிபதி அடுத்த மூன்று வருடத்துக்கு அனைத்து கட்சிகளினதும் ஆதரவை கோர வேண்டும்?
ஒன்பதாவது பாராளுமன்றின் இரண்டாவது கூட்டத்தொடரை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைத்து கொள்கை விளக்கவுரையை ஆற்றிய ஜனாதிபதி கோட்டாபய, நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களிலிருந்து வெற்றி பெற அனைத்துத்தரப்பினரினதும் ஆதரவை கோரியுள்ளார்.
முக்கியமாக எதிர்க்கட்சியினது ஆதரவையும் அவர் எதிர்ப்பார்த்து அவர் கொள்கை விளக்கவுரை ஆற்றினாலும் , உரைக்குப்பிறகு சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்ற தேநீர் விருந்துபசாரத்தில் எதிர்த்தரப்பினர் வரும் கலந்து கொள்ளாது பகிஷ்கரித்திருந்தமை அவரது கோரிக்கையை நிராகரிப்பதாகவே அமைந்துள்ளது எனலாம்.
பொதுவாக பாராளுமன்ற கூட்டத்தொடர் சம்பிரதாயங்களில் வரவு செலவு திட்ட இறுதி வாக்கெடுப்பு மற்றும் ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரைகளின் பின்னர் இவ்வாறு தேநீர் விருந்துபசாரங்கள் இடம்பெறுவது வழக்கம்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-23#page-6
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM