மொனராகலை தனமல்விலைப் பகுதில் இன்று வேனொன்றும், தனியார் பஸ்சொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியதில் வயோதிபப் பெண்ணொருவர் பலியானதுடன், ஆறு பேர் படுங்காயமடைந்துள்ளதாக தனமல்விலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் மொனராகலை தனமல்விலைப் பகுதியின் கித்துல்கோட்டை என்ற இடத்தில்இன்று 26-01-2022 இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ரன்ஜனி வீரசிங்க என்ற 65 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து குறித்த பெண்ணின் சடலம் தற்போது, தனமல்விலை அரசினர் வைக்கப்பட்டுள்ளது. பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு படுகாயமடைந்த ஆறு பேரும், தனமல்விலை அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் வேனொன்றில் மிந்தெனியவில் இடம்பெற்ற மரணக்கிரியை ஒன்றில் கலந்து கொண்ட பின், மீளவும் தனமல்விலைக்கு வீடு நோக்கி திரும்புகையிலேயே, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவரே, வேனை செலுத்தியுள்ளார். இவர்களது இரு மகள்கள் மற்றும் மூன்றுப் பேரப்பிளைகள் ஆகியோரே, மரணக் கிரியைகளில் கலந்துகொண்டு திரும்பியவர்களென ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தனமல்விலைப் பொலிசார் மேற்படி விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், விபத்திற்குள்ளான தனியார் பஸ் சாரதி, பொலிசாரால் கைது செய்யப்பட்டுவிசாரணையின் பின்னர் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக, பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM