(ஜெ.அனோஜன்)
எதிர்வரும் அவுஸ்திரேலியாவுடான டி:20 தொடருக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ருமேஸ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்து, இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழுவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்றுக்குள்ளான நிலையில் தற்சமயம் சுய தனிமைப்படுத்தலில் இருக்கும் அவர், இலங்கை அணியுடன் அவுஸ்திரேலியா புறப்பட மாட்டார்.
மாறாக தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்ததும், போட்டிகள் ஆரம்பமாகுவதற்கு முன்பாக அவர் இலங்கை அணியுடன் இணைந்து கொள்வார்.
இதற்கிடையில் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் 20 வீரர்களை கொண்ட இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டது.
இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி:20 தொடர் எதிர்வரும் பெப்ரவரி 11 முதல் சிட்னி, கான்பெர்ரா மற்றும் மெல்போர்ன் மைதானங்களில் நடைபெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM