(கார்வண்ணன்)
பொருட்களுக்காக மக்கள் வரிசையில் காத்திருந்த நிலை இப்போது அரசாங்கமே வரிசையில் காத்திருக்கின்ற நிலையாக மாறிக் கொண்டிருக்கிறது.
டொலர்களுக்காக வெளிநாடுகளிடம் கையேந்துகிறது அரசாங்கம்.
இன்னொரு பக்கம், எரிபொருளைப் பெறுவதற்கான மின்சார சபை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் கெஞ்சுகின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
டொலர்களைத் தந்தால், எரிபொருள் தருவோம் என்கிறது பெற்றோலியக் கூட்டுத்தாபனம்.
மின்சார சபைக்கு ரூபாவிலேயே வருமானம் கிடைக்கிறது. அவர்களால் எவ்வாறு டொலர்களின் எரிபொருள் கட்டணத்தைச் செலுத்த முடியும்?
அதற்கு மத்திய வங்கியோ, வர்த்தக வங்கிகளோ தான் உதவ வேண்டும்.
மத்திய வங்கி கையிருப்பில் உள்ள டொலர்களைக் கைவிடத் தயாராக இல்லை. இதனால், வர்த்தக வங்கிகளிடம் டொலர்கள் இல்லை.
இந்த இழுபறியால், மின்சாரத் தடை நாட்டை ஆக்கிரமித்திருக்கிறது.
ஒரு வாரத்துக்கு முன்னரே மின்சார சபை தினமும் பகலிலும் இரவிலும், நான்கு மணிநேர மின்வெட்டு வரப் போகிறது என்று அட்டவணை ஒன்றை வெளியிட்டது.
பின்னர், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருள் கிடைத்த நிலையில், சில நாட்களுக்கு தாக்குப் பிடித்தது.
எவ்வாறாயினும், இலங்கையில் தற்போதுள்ள மின்உற்பத்தி வளங்களின் போதாமையும், பொருளாதார நெருக்கடிகளும் இணைந்து பாரிய நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளன.
இந்தப் பிரச்சினையை அரசாங்கம் கையாளுகின்ற முறை குறித்த பலத்த விமர்சனங்கள் உள்ளன.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-23#page-3
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM