(சத்ரியன்)
“உள்ளக விமர்சனங்கள் வரவேற்றத்தக்கவையாக இருந்தாலும், அது பொதுவெளிக்கு வரும் போது நெருக்கடியைக் கொடுக்கும். கட்சியைப் பலவீனப்படுத்தும் என்பதனை சரியாகப் புரிந்து கொள்ளாத சம்பந்தனைப் போன்றே பிரதமர் மஹிந்தவின் முன்னைய நிலைப்பாடும் இருந்தது”
அரசாங்கத்துக்குள், இருந்து செய்யப்பட்ட விமர்சனங்கள், உள்ளக ஜனநாயகமாகவும், ஜனநாயக உரிமையாகவும் பார்க்கப்பட்ட நிலைமை இப்போது மாறத் தொடங்கியிருக்கிறது.
அது துரோகமாகவும், அரசியல் நாகரீகம் அற்ற செயற்பாடாகவும், அடையாளப்படுத்தப்படும் நிலை இப்போது உருவாகியிருக்கிறது.
அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு, விமர்சனம் செய்பவர்களை கண்டித்திருந்தார்.
கூட்டுப்பொறுப்பை மீறி விமர்சனங்களை முன்வைக்க கூடாது என்று பங்காளிகளை அவர் எச்சரித்தார்.
அதேபோன்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி திறக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய போது, அரசாங்கத்தில் இருந்து கொண்டு, எதிரான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் வெளியேறலாம் என்று கூறியிருக்கிறார்.
மல்லாக்காக படுத்திருந்து கொண்டு, எச்சில் துப்பும் காரியம் அநாகரீகமானது என்றும், அரசாங்கத்தில் இருக்க விரும்பாதவர்கள், வெளியே போகலாம், கதவுகள் திறந்தே உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதுபோல, நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவும், இதே கருத்தை அண்மையில் கூறியிருக்கிறார். அதைவிட நாமல் ராஜபக்ஷவும் கூட அவ்வாறே குறிப்பிட்டிருக்கிறார்.
அரசாங்கத்தில் அதிகாரம் செலுத்தும் சக்திகளாக இருப்பவர்கள் இவர்கள்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-23#page-3
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM