வெலிமடைப் பகுதியின் லூணுவத்தை தேசியக் கல்லூரியின் ஆசிரியரொருவர் உட்பட 25 மாணவர்கள், குளவிக் கொட்டுக்கு இழக்காகி, ஊவா – பரணகமை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கல்லூரி அருகிலுள்ள கித்துல் மரத்திலிருந்த குளவிக் கூடு கலைந்து, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியரை கொட்டத் தொடங்கின.
இதையடுத்து, ஏனைய மாணவர்களில் சிலர் அப் பகுதியில் குப்பைகளை, எரியூட்டி, புகையை எழுப்பினர். இதையடுத்து குளவிகள் அடங்கியதும், குளவிக் கொட்டுக்கிழக்கான ஆசிரியர் உள்ளிட்ட 25 மாணவர்கள், ஊவா – பரணகமை அரசினர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைகள் அளிக்கப்பட்டனர்.
இவர்களில் 8 மாணவர்கள் மட்டும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், ஏனையோர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM