(கபில்)
“ஜனாதிபதியின் உரையில், இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றியோ, இன நல்லிணக்க விவகாரங்கள் குறித்தோ, மட்டுமல்ல மாகாண சபைத் தேர்தல் பற்றிக் கூட கூறப்படவில்லை”
“பல மாதங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு பின்னர் மீண்டும் அறிவிக்கின்றேன் என்று கூறிய ஜனாதிபதி கோட்டாபயவை சம்பந்தனும், கூட்டமைப்பும் சரியாக புரிந்து கொள்ளாது நல்லிணக்க சமிக்ஞைகளை வெளிப்படுத்துவார் என்றும்இ பேச்சுக்கு அழைப்பார் என்றும் நம்பியதும் நம்பிக் கொண்டிருப்பது தான் தவறு”
கடந்த வாரத்தில் பெரிதும் எதிர்பார்ப்புக்குரிய விடயமாக இருந்தது, பாராளுமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய நிகழ்த்திய அரசாங்கத்தின்கொள்கை விளக்க உரை. அந்த உரை பரவலான ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த மாதம் பாராளுமன்றத்தை திடீரென ஒத்திவைத்து விட்டு, சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தார் ஜனாதிபதி.
ஏன், எதற்காக அவர் பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார் என்ற கேள்விக்கு, இன்று வரை பதில் இல்லை.
பாராளுமன்றக் கூட்டத்தொடரை, ஒரு மாதம் வரை, ஒத்திவைக்கும் அதிகாரம், அவருக்கு உள்ளது. அவர் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டார், அவ்வளவு தான் மக்களுக்குத் தெரியும்.
அதிரடியான அரசியல் முடிவுகளை எடுப்பதற்காக, ஜனாதிபதி அவ்வாறு செய்திருக்கலாம் என்ற பேச்சும் அடிப்பட்டது.
பின்னர், புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்து வைக்கும் உரையில், ஜனாதிபதி முக்கியமான பல அறிவிப்புகளை வெளியிடலாம் என்ற எதிர்ப்பும் வெளியிடப்பட்டது.
ஆனால், ஜனாதிபதியின் உரையில் அவ்வாறான எந்த புது விடயங்களையும் காண முடியவில்லை.
ஜனாதிபதியின் உரையில், இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றியோ, இன நல்லிணக்க விவகாரங்கள் குறித்தோ, மட்டுமல்ல மாகாண சபைத் தேர்தல் பற்றிக் கூட கூறப்படவில்லை.
இந்த உரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-23#page-1
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM