(எம்.எம்.சில்வெஸ்டர்)
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரொஷான் மஹநாம ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளமை குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு ரொஷான் மஹநாம அனுப்பி வைத்துள்ள எழுத்து மூல ஆவணமொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி 5 ஆம் திகதியன்று நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் தலைவராக அரவிந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன், ரொஷான் மஹநாம, முத்தையா முரளிதரன்,குமார் சங்கக்கார ஆகியோர் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்த முடிவை, தான் எடுத்ததாகவும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து சேவையாற்றுவதில் எவ்வித விருப்பமின்மையும் தனக்கில்லையென எவரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என ரொஷான் மஹநாம குறிப்பிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM