நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு சீமெந்து பக்கெட்டுகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
அதன்படி, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, குருணாகல், இரத்தினபுரி, பதுளை, மொனராகலை, அனுராதபுரம், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 56 சீமெந்து விற்பனை நிலையங்கள் அண்மைக்காலமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
சீமெந்து பக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்யாது மறுப்பது, கையிருப்பில் சீமெந்து இருக்கும் போது பற்றாக்குறையை காரணம் காட்டி, பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் விற்பனை செய்தல் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படுகின்றது.
அதன்படி, சட்டத்தை மீறும் விற்பனையாளர்களுக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகார சபை கூறியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM