வெளிநாட்டிலிருந்து கடத்தி கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் 300 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஆறு இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் தெற்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் அரச புலனாய்வுப் பிரிவினர், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மற்றும் இலங்கை கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இன்று (24) மாலை 4.00 மணியளவில் இந்த பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலுக்காக சந்தேக நபர்கள் பயன்படுத்தி இழுவைப் படகும் அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 3 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதேநேரம் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களும் படகும் நாளை காலை கரைக்கு கொண்டுவரப்படவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM