தெற்கு கடற்பகுதியில் 300 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஆறு பேர் கைது

Published By: Vishnu

24 Jan, 2022 | 05:08 PM
image

வெளிநாட்டிலிருந்து கடத்தி கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் 300 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஆறு இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் தெற்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் அரச புலனாய்வுப் பிரிவினர், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மற்றும் இலங்கை கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இன்று (24) மாலை 4.00 மணியளவில் இந்த பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தலுக்காக சந்தேக நபர்கள் பயன்படுத்தி இழுவைப் படகும் அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 3 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அதேநேரம் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களும் படகும் நாளை காலை கரைக்கு கொண்டுவரப்படவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55