கிளிநொச்சியில் தாயும் மகளும் தீயில் கருகி உயிரிழப்பு 

Published By: Digital Desk 4

23 Jan, 2022 | 11:27 AM
image

கிளிநொச்சி  தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில்  கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு 11 .50 மணியலவில் 47 வயதான ஆனந்தராசா சீதேவி என்ற 07 பிள்ளைகளின் தாயும், அவரது மகளான 17 வயதுடைய லக்சிகா ஆகியோர் தீயில் எரிந்து கருகிய நிலையில் அடையாளம் காணப்பட்டனர்.

இச் சம்பவம் தொடர்பாக நேற்றுமுந்தினம் 21.01.2022 தருமபுரம் பொலிசாருக்கு  தகவல் வழங்கப்பட்டதையடுத்து  சம்பவ இடத்திற்கு விரைந்த தருமபுரம்  பொலிசார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் நேற்று 22.01.2020 சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட  நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் சடலங்களை பார்வையிட்டார்.

குறித்த சடலங்களை பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் அதே வேளை பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்ட நிலையில் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட பொது  வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அத்துடன்  அப்பகுதியில் ஒரு போத்தலில் பெற்றோலும் மற்றும் ஒரு கத்தி, ஒரு தொலைபோசி  என்பவற்றை தடையில் பொலிசார்  அடையாளம் கண்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பாக  தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19