(என்.வீ.ஏ.)
தென் ஆபிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பார்ள், போலண்ட் பார்க் விளையாட்டரங்கில் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றியீட்டிய தென்ஆபிரிக்கா தொடரை 2 - 1 என்ற ஆட்டக் கணக்கில் கைப்பற்றியது.
ஆரம்ப வீரர்களான ஜான்மன் மாலன், குவின்டன் கொக் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் தென் ஆபிரிக்காவின் வெற்றியை இலகுபடுத்தின.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 287 ஓட்டங்களைக் குவித்தது.
இதில் ரிஷாப் பன்ட் 85 ஓட்டங்களையும் அணித் தலைவர் கே.எல். ராகுல் 55 ஓட்டங்களையும் ஷர்துல் தாகூர் ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.
தென் ஆபிரிக்க பந்துவீச்சில் தப்ரெய்ஸ் ஷம்சி 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
288 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 3 விக்கெட்களை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஜான்மன் மாலன் 91 ஓட்டங்களையும் குவின்டன் டி கொக் 78 ஓட்டங்களையும் பெற்றதுடன் ஆரம்ப விக்கெட்டில் 132 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
டெம்பா பவுமா (35), ஏய்டன் மார்க்ராம் (37 ஆ.இ.), ரெஸி வென் டேர் டுசென் (37 ஆ.இ.) ஆகியோரும் துடுப்பாட்டத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கினர்.
ஆட்டநாயகனாக குவின்டன் டி கொக் தெரிவானார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM