“ஆசிரியர் ஒரு பிள்ளையை தண்டித்ததால் நீதி மன்றத்தில் வழக்குத் தொடரும் நிலை”

Published By: Robert

06 Oct, 2016 | 10:48 AM
image

மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள், சுதந்திரம், ஜனநாயகம் என்பன சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டுமேயன்றி சமூகத்தை பிழையாக வழிநடத்தும் வகையில் அல்ல என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். 

பாடசாலை ஆசிரியர் ஒரு பிள்ளையை தண்டித்தால் நீதி மன்றத்தில் வழக்குத் தொடரும் நிலைக்கு இன்று எமது சமூகம் மாறியுள்ளது. அது நியாயமானதா நியாயமற்றதா என்பது தொடர்பில் வாதங்கள் உள்ளபோதும், அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை அனுபவிக்கின்ற அதேநேரம் அவற்றை உண்மையாக விளங்கிக்கொள்வதும் அறிந்து கொள்வதும் பெற்றோர்களது பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.  

கொழும்பு தாமரைத்தடாகம் கலையரங்கில் நடைபெற்ற 'குரு பிரதிபா பிரபா பிரணாம' விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

இலங்கை பாடசாலைக் கல்வித்துறையில் முக்கிய இடம் வகிக்கும் ஆசிரியர்களும் அதிபர்களும் தமது தொழில் உயர்வானது என்பதை உலகிற்கு எடுத்துச்சொல்லி நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செய்யும் சேவைக்கு உரிய உபகாரம் செய்யும்வகையில் கல்வி அமைச்சு 'குருபிரதிபா பிரபா பிரணாம' விழாவை வருடாந்தம் ஏற்பாடு செய்துவருகிறது. 

ஒரு சமூகத்தையும் நாட்டையும் மாற்ற வேண்டியது அரசியல்வாதிகளின் பணியாகும் என்றபோதும், நாட்டையும் சமூகத்தையும் ஆன்மீக ரீதியாக குணப்படுத்துவதற்கு ஆசிரியர்களால்தான் முடியும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஆசிரியர் சேவையின் மேன்மைக்காக ஒரு அரசு என்றவகையில் பெற்றுக்கொடுக்கக்கூடிய அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுக்க தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார். 

250 அதிபர்கள் 459 ஆசிரியர்கள் 29 பிரிவெனாக்களின் தலைவர்கள் மற்றும் 56 பிரிவெனா ஆசிரியர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டதோடு, ஜனாதிபதியினால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. 

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், இராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணன், பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா உள்ளிட்ட அமைச்சர்கள், மாகாண கல்வி அமைச்சர்கள், கல்வித்துறையைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27