( எம்.எப்.எம்.பஸீர்)
வெளிநாட்டு பண கடத்தலில் ஈடுபட்ட 05 பேர் கொண்ட கும்பலொன்று கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் வெளிப்படுத்திக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கு அமைய இந்த சந்தேக நபர்கள், டுபாய் செல்ல வந்த போது கையும் களவுமாக கைதுசெய்ததாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதி சுங்கப் பணிப்பாளர் ( சட்டம்) சுதத்த சில்வா தெரிவித்தார்.
மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்கிய கும்பலே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது.
மிக சூட்சுமமான முறையில் பணத்தை பயணப் பொதிகளில் மறைத்து வைத்து, சந்தேகநபர்கள் டுபாய் நோக்கி பயணிக்க முயற்சித்ததாகவும், சந்தேகநபர்களிடமிருந்து 22,300 அமெரிக்க டொலர், 63,500 ஸ்டேர்லிங் பவுன், 292,000 சவுதி ரியால் மற்றும் 75,000 திர்ஹம் ஆகியன கைப்பற்றப்பட்டதாகவும் சுங்க பேச்சாளர் கூறினார்.
கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு பணம் 42 மில்லியன் ரூபா பெறுமதியானது என மதிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM