தலைமன்னார் பாக்கு நீரினை ஊடாக கடத்திவரப்பட்டதாக கூறப்படும் ஐஸ் என்ற போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது,
நேற்று புதன்கிழமை (19.01.2022) பிற்பகல் தலைமன்னார் கிராமத்திலுள்ள கடற்கரை பகுதியில் வெளிக்கள படகு ஒன்றை கடற்படையினர் சந்தேகத்தின் நிமித்தம் சோதனையிட்டபோது அதற்குள் இருந்து 485 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளை கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த இளைஞனையும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளையும் கடற்படையினர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து பொலிசார் அந்த சந்தேக நபரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதுடன், அவரையும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளையும் மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM