மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரத்தில் பெண் ஒருவரின் உறவினர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டமை தொடர்பில் வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த 7 பேரை வாள், கத்தியுடன் நேற்று புதன்கிழமை (19) இரவு கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளதாகவும் அப்பெண்ணுக்கு விருப்பமில்லாத நிலையில் அவரை இளைஞன் பின் தொடர்ந்து தொந்தறவு செய்து வந்துள்ளதாகவும் பெண்ணின் உறவினருக்கும் குறித்த இளைஞனுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுவந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த பெண்ணை காதலித்து வந்த இளைஞர் அவரது நண்பர்களுடன் பெண்ணின் உறவினர் மீது மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று தலைமறைவாகி இருந்த 7 பேரை நேற்று புதன்கிழமை இரவு பொலிசார் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து வாள் மற்றும் கத்திகளை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதையடுத்து குறித்த சமபவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM