முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நடத்திய சர்ச்சைக்குரிய “வெள்ளை வேன்” ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான வழக்கை மார்ச் மாதம் முதல் விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அதன்படி கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.
அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூமி ஆகியோர் மீது சர்ச்சைக்குரிய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் 2020 ஓகஸ்ட் மாதம் கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
குறித்த விடயம் தொடர்பில் 2019 டிசம்பரில் அப்போதைய சட்டமா அதிபரின் உத்தரவின் பேரில், ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் கொழும்பு பிரதான நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM