பதுளை ஹாலி - எலைப் பகுதியின் உடுவரை என்ற இடத்தில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இராணுவ சிப்பாய் ஒருவர் படுங்காயங்களுக்குள்ளான நிலையில், அவர் பதுளை அரசினர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த நபரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
குறித்த இராணுவ சிப்பாய், கந்தளாயிலிருந்து, தியத்தலாவைக்கு கடமைக்கு சென்று கொண்டிருந்த வேளையில் உடுவரை என்ற இடத்தில், நாயொன்று குறுக்கே பாய்ந்ததினால், நிலைத்திடுமாறி குறித்த, இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவ் விபத்தில், மோட்டார் சைக்கிளை செலுத்திய இராணுவ சிப்பாய், மோட்டார் சைக்கிளிலிருந்து, அருகேயுள்ள வயல்வெளிக்கு தூக்கி எறியப்பட்டதையடுத்து படுகாயமடைந்துள்ளார்.
இதையடுத்து குறித்த விபத்து தொடர்பில் பதுளைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM