(இராஜதுரை ஹஷான்)
மின்விநியோகத்தை மின்சார சபையினால் கட்டுப்படுத்த முடியும் ஆனால் போக்குவரத்துக்கான எரிபொருள் விநியோகத்தை எம்மால் கட்டுப்படுத்த முடியாது.
மின்சார சபை 24 மணித்தியாலமும் தடையில்லாமல் மின்விநியோகத்தை வழங்கினால் எதிர்வரும் நாட்களில் மின் உற்பத்திக்கான எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் பாரிய நெருக்கடிய ஏற்படும்.
மின்சாரத்துறை அமைச்சு முன்கூட்டி திட்டங்களை முறையாக செயற்படுத்த வேண்டும் என வலுசக்தித்துறை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
வலுசக்தித்துறை அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விநியோகிக்காத காரணத்தினால் மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் விடயம் முற்றிலும் தவறானதாகும்.
மின்சார சபை முறையான திட்டங்களை செயற்படுத்தவில்லை என்பதை குறிப்பிட வேண்டும்.
கடந்த டிசெம்பர் மாதகாலப்பகுதியில் நீர்மின் ஊடாக 60சதவீத மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதால் மின்சார சபை தமக்கு டீசல் மற்றும் உராய்வு எண்ணெய் பெப்ரவரி மாதமளவில் அவசியப்படும் என கடந்த வருடத்தின் இறுதி பகுதியில் குறிப்பிட்டது.
வறட்சியான காலநிலை ஆரம்பமானதை தொடர்ந்து மின்சார சபை மின் உற்பத்திக்கு தேவையான டீசல் மற்றும் உராய்வு எண்ணெய் ஆகியவற்றை வழங்குமாறு இம்மாதம் 11ஆம் திகதி கோரியது.மின்சார சபைக்கு ஒரு நாளைக்கு மாத்திரம் 1500 மெற்றிக்தொன் டீசல் விநியோகிக்க வேண்டும்.
அச்சந்தர்ப்பத்தில் பெற்றோலிய வளங்கள் கூட்டுத்தாபனத்திடம் மின்சார சபைக்கு விநியோகிப்பதற்கான எரிபொருள் கையிருப்பில் இருக்கவில்லை.
கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் அரசாங்கம் பாரிய வெளிநாட்டு கையிருப்பு சவாலை எதிர்க்கொண்டுள்ளது.
வலுசக்தி துறை அமைச்சின் கடமைக்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு தேவையான டொலரை திரட்டிக் கொள்வதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள வேளை மின்சாரத்துறை அமைச்சின் கடமைக்கும் டொலர் திரட்டுவது சிக்கல் நிலைமையை தோற்றுவித்துள்ளது.
மின்சார சபை பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்விநியோகத்தை கட்டுப்படுத்த முடியும். ஆனால் போக்குவரத்து தேவைக்கான எரிபொருளை எம்மால் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது.
மின்சார சபைக்கு தற்போது 10,000 மெற்றிக்தொன் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது. அத்தொகை 8 நாட்களுக்கு மாத்திரம் போதுமானதாக அமையும்.
ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் அவசியம்.ஏற்றுமதி வருமானத்தி;ன் ஊடாக ஒரு மாதத்திற்கு 750 தொக்கம் 800 மில்லியன் டொலர் கிடைக்கப் பெறுகிறது.வரவினை காட்டிலும் செலவு அதிகமாக உள்ளது.
மின்சார சபை 24 மணித்தியாலமும் மின்விநியோகத்தை வழங்கினால் எதிர்வரும் நாட்களில் மீண்டும் மின் உற்பத்திக்கான எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும்.
பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின் விநியோகத்தை கட்டுப்படுத்துவது குறித்து மின்சார சபை அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM