(எம்.மனோசித்ரா)
நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்று மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை.
அது போன்ற நிலைமைகள் ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று 19 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
பசுமை விவசாயத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சியின் காரணமாக குறுகிய காலத்திற்கு சில நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது.
இதனால் உள்நாட்டு உற்பத்திகளை குறைவடையும் என்று எதிர்பார்த்தால் , அது 20 - 25 சதவீதமாகவே காணப்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அது தவிர இலங்கை மற்றும் சீனாவிற்கிடையிலான இறப்பர் - அரிசி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு சீனாவிடமிருந்து 10 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி அன்பளிப்பாக கிடைக்கப் பெறவுள்ளது.
இந்த அரிசி தொகை மார்ச் மாதமளவில் நாட்டுக்கு கிடைக்கப் பெறும்.
மறுபுறம் அரசாங்கம் தோட்டப்புறங்களில் மரக்கறி மற்றும் பழங்கள் உள்ளிட்டவற்றின் உற்பத்திகளையும் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறான உற்பத்திகளில் ஈடுபடுகின்ற ஒவ்வொரு வீடுகளுக்கும் 5000 ரூபா பெறுமதியுடைய விவசாய பொருட்களை வழங்குவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஓரிரு வாரங்களில் இந்த வேலைத்திட்டங்கள் ஆரம்பமாகும்.
இதனை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு தத்தமது தேவைக்கு உகந்தவற்றையாவது உற்பத்தி செய்யுமாறு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM