(இராஜதுரை ஹஷான்)
ஐக்கிய இராச்சியத்தின் தென் ஆசிய மற்றும் பொதுநலவாய அமைப்பின் இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் பிரபுவிற்கும் பிரதமர் மஹிந்த ராஸபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பு - ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.
இலங்கையுடனான ஒத்துழைப்பினை மேலும் வலுப்படுத்தும் வகையில் 3நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் நேற்று நேற்று 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வருகை தந்தார்.
உயர்மட்ட இராஜதாந்திரிகளுடன் சந்திப்பில் ஈடுப்படவுள்ள இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் பிரிவு யாழ்ப்பாணம்,திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் மேம்பாடு,வெளிநாட்டு தொழில் மற்றும் கல்வி துறையை விரிவுப்படுத்தல்,ஆகிய துறைகள் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளன.
பிரதமருடனான சந்திப்பின் போது நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ, வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்,சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர,மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய,இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சாரா ஹூல்டன்,வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொழபகே ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM