(எம்.மனோசித்ரா)
ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் என்பவற்றுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன.
அதற்கமைய கொவிட் தொற்றுக்கு உள்ளான மாணவர்களுக்கும் பரீட்சையில் தோற்றக் கூடிய ஏற்பாடுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம், சுகாதார அமைச்சுடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.எல்.டி.தர்மசேன தெரிவிக்கையில்,
எதிர்வரும் 22 ஆம் திகதி சனிக்கிழமை ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது. காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை முதலாம் பகுதியும், 11 மணி முதல் நண்பகல் 12.15 மணி வரை இரண்டாம் பகுதியும் இடம்பெறும்.
பரீட்சாத்திகளை ஆசிரியர்கள் அல்லது பெற்றோர் 09.00 மணிக்கு பரீட்சை மண்டபங்களுக்கு அழைத்து வர வேண்டும்.
இம்முறை 3 இலட்சத்து 40 ஆயிரத்து 508 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இவர்களில் 2 இலட்சத்து 55 ஆயிரத்து 62 பேர் சிங்கள மொழி மூலமும் , 85 ஆயிரத்து 446 பேர் தமிழ் மொழி மூலமும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
இதற்காக 2,943 பரீட்சை மத்திய நிலையங்களும் , 496 ஒருங்கிணைப்பு நிலையங்களும் , 108 விசேட பரீட்சை நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.
இதே வேளை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகி , மார்ச் 5 ஆம் திகதி முடிவடைகிறது. இம்முறை 3 இலட்சத்து 45 ஆயிரத்து 242 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இவர்களில் 2 இலட்சத்து 79 ஆயிரத்து 141 பேர் பாடசாலைகள் ஊடாகவும் , 66,101 பேர் தனியார் பரீட்சாத்திகளாகவும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர் என்றார்.
விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவிக்கையில் ,
கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்ட மாணவர்கள் , தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்கள் , தொற்று அறிகுறியுடைய மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதற்காக நாடளாவிய ரீதியில் 108 விசேட பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
அத்தோடு உயர்தர பரீட்சைக்கு தோற்றும் சந்தர்ப்பங்களில் தொற்றுறுதி செய்யப்படும் மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்காக மாவட்டம் தோறும் ஒவ்வொரு வைத்தியசாலைகளில் அவர்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM