இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான தட்டுப்பாடு அடுத்த மாதம் வரை தொடருமாம்

Published By: Vishnu

17 Jan, 2022 | 04:06 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் ஏற்பட்டிருக்கும் இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான தட்டுப்பாடு அடுத்த மாதம் நடுப்பகுதி வரை தொடரும் சாத்தியம் இருக்கின்றது என பால்மா இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவிக்கின்றது.

 பால்மா இறக்குமதி செய்வதற்கு தேவையான வங்கி நாணய கடிதம் திறப்பதற்கு டொலர் பற்றாக்குறையாக இருப்பதே இதற்கு காரணம் எனவும் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இலங்கையில் மாதம் ஒன்றுக்கு 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் டொன் பால்மா தேவையாகின்றது. அதற்காக 30 மில்லியன் டொலர் தேவையாகின்றது. சாதாரணமாக வாரத்துக்கு ஒருமுறை பால்மா அடங்கிய கப்பல் ஒன்று நாட்டுக்கு வருகின்றது. 

தற்போதைய நிலைமையில் பால்மா அடங்கிய கப்பல் ஒன்று வர இருப்பது இந்த மாதம் இறுதி இரண்டு வாரங்களுக்குள்ளாகும். அவ்வாறு பால்மா அடங்கி கப்பல் வந்தாலும் தற்போது பால்மாவுக்கு இருக்கும் பற்றாக்குறை தீரப்போவதில்லை எனவும் சங்கத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31