(எம்.ஆர்.எம்.வசீம்)
மின் உற்பத்திக்காக நாளாந்தம் 1,500 மெட்டிக்தொன் டீசலை இலங்கை மின்சாரசபைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
களனிதிஸ்ஸ மின் உறுபத்தி நிலையத்துக்கு தேவையான டீசல் இல்லாமை காரணமாக நேற்று கொழும்பு, கம்பஹா உட்படநாட்டின் பல பிரதேசங்களில் சுமார் இரண்டரை மணி நேரம் மின் துண்டிப்பு ஏற்பட்டது.
அதனால் அவசர தேவை கருதி இன்று முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை நாளாந்தம் 1,500 மெட்ரிக்தொன் டீசலை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.
எரிபொருள் பெற்றுக்கொண்டமைக்காக இலங்கை மின்சாரசபை 91 பில்லயன் ரூபா பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு வழங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM