ஓய்வு குறித்த முடிவினை மாற்றினார் பானுக

Published By: Vishnu

13 Jan, 2022 | 11:59 AM
image

இலங்கை கிரிக்கெட் வீரரர் பானுக ராஜபக்ஷ தனது ஓய்வு கடிதத்தை மீளப் பெறுவதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளார்.

இந்த தகவலை இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவினை பானுக ராபக்ஷ ஜனவரி 03 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, லசித் மலிங்கா உட்பட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் பலர் ஓய்வு குறித்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந் நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ஷ விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை நேற்று அலரி மாளிகையில் வைத்து சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ஓய்வு முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு பானுக ராஜபக்ஷவிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந் நிலையிலேயே பானுக ராஜபக்ஷ ஓய்வு குறித்த முடிவினை மீளப் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35