(இராஜதுரை ஹஷான்)
அரசாங்கம் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை.
சுதந்திர கட்சியினரது செயற்பாடுகள் குறித்து அவதானத்துடன் உள்ளோம். சுதந்திர கட்சியினர் கடந்த காலஅரசியல் நிலைமையினை நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என நுண்கடன் மற்றும் சமுர்த்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன கடந்த இரண்டு வருடகாலமாக நித்திரை செய்து விட்டு தற்போது எழுந்துள்ளதை போன்று அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார். அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை.
நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. கொவிட் -19 வைரஸ் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் அத்தியாவசிய பொருள் இறக்குமதியிலும்,விநியோக கட்டமைப்பிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் வீழ்ச்சியடைந்த காரணத்தினால் வெளிநாட்டு கையிருப்பும் குறைவடைந்துள்ளன.
பொது காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள சவால்களை வெற்றிக் கொள்ள அரசாங்கம் முறையான திட்டங்களை வகுத்துள்ளது. அனைத்து சவால்களுக்கும் மத்தியில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கம் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சுதந்திர கட்சியின தலைவர் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் அரச வரபிரசாதங்களை முழுமையாக அனுபவித்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிக்கிறார்கள். அரசாங்கத்தின் கொள்கை தவறு என்றால் அவர்கள் தாராளமாக அரசாங்கத்தில் இருந்து வெளியேறலாம்.
சுதந்திர கட்சியினரது செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம்.சுதந்திர கட்சியினர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் அரசாங்கத்தின் இருப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
கூட்டணியின் பிரதான பங்காளி கட்சியாக சுதந்திர கட்சி அங்கம் வகிக்கவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM