(எம்.மனோசித்ரா)
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பௌத்த மரபுரிமைகளை மேம்படுத்துவதற்காக அடையாளங் காணப்பட்டுள்ள கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கலாசாரம் மற்றும் மக்கள் தொடர்புகளை மேம்படுத்துவதற்காகவும், இரு நாடுகளுக்கும் இடையில் பௌத்த மரபுரிமைகளின் ஒத்துழைப்புக்களை மேலும் வலுவூட்டுவதற்காகவும் அடையாளங் காணப்பட்டுள்ள கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 05 வருட காலத்தில் 2.89 பில்லியன் இலங்கை ரூபாவினை நன்கொடையாக வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.
உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, இயலளவு விருத்தி, கலாசார விவகாரங்கள், தொல்லியல் ரீதியான ஒத்துழைப்புக்கள், இலங்கையில் புத்த பிரானின் வணக்கத்திற்குரிய புனித தந்ததாதுக்களை காட்சிப்படுத்தல் மற்றும் இந்தியாவுக்கான பௌத்த யாத்திரைகளை மேம்படுத்தல் போன்ற விடயங்களுக்கு ஏற்புடைய வகையில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் ஆகியோர் இணைந்த அடையாளங் காணப்படும் கருத்திட்டங்களை இவ்வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM