அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு பொய்ப்பிரசாரங்களில் ஈடுபடும் எதிரணி

Published By: Raam

04 Oct, 2016 | 10:05 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

அரச அதிகாரிகள் தங்கள் கிராமங்களுக்கு சென்று அரசியல் செய்யும் காலம் முடிந்துவிட்டது. அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவேண்டும் என அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

இரத்தினபுரியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

பாராளுமன்றத்தில் கூட்டு எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஒருசிலர் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். ராஜபக்சவினர் எப்போதும் அதிகாரத்தில் இருக்கவேண்டும் என்றே நினைக்கின்றனர்.  அதிகாரம் என்பது யாரிடமும் இருக்கலாம் எப்போது வேண்டுமானாலும் இல்லாமல் போகலாம். 

இந்த அரசாங்கம் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே முன்னின்று செயற்படும். அரசாங்கம் அவ்வாறு நடந்துகொள்ளும்போது அரச ஊழியர்களும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவேண்டும், அரசாங்கத்தின் வருமானங்களின் பிரதிபலன் மக்களுக்கு போய்ச்சேர நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். நிறுவனங்களின் அதிகாரிகள் கிராமங்களுக்கு சென்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சிக்கின்றனர், இது தொடர்பாக ஒருவருட காலம் அவதானித்து வந்தோம். இனிமேல் அரச அதிகாரிகள் கிராமங்களுக்கு சென்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது. அவ்வாறு செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36