(எம்.மனோசித்ரா)
கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டம் நாளை புதன்கிழமை கொழும்பு தேஸ்டன் வித்தியாலயத்தில் ஆரம்பமாகும் என்று விசேட வைத்திய நிபுணர் டி.எம்.ஜயலத் தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
2010 ஜனவரி 7 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்த அனைத்து சிறுவர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் நாளை புதன்கிழமை முதல் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் தேஸ்டன் வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இரு கட்டங்களாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதால் அன்றைய தினம் பாடசாலைகளில் தடுப்பூசி வழங்க முடியாது.
எனவே நாளை முதல் பெப்ரவரி 5 ஆம் திகதி வரை முதற்கட்டமாக தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
அதற்கமைய நாளை தேஸ்டன் வித்தியாலயத்திலும் , 13 ஆம் திகதி விசாகா வித்தியாலயத்திலும் , 14 ஆம் திகதி யசோதரா வித்தியாலயத்திலும் , 18 ஆம் திகதி ரோயல் கல்லூரியிலும் , 19 ஆம் திகதி நாலந்தா வித்தியாலயத்திலும் , 20 ஆம் திகதி ஆனந்தா கல்லூரியிலும் , 21 ஆம் திகதி தேவி பாலிகா வித்தியாலயத்திலும் , 23 ஆம் திகதி இந்து மகளிர் கல்லூரியிலும் , 24 ஆம் திகதி சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்திலும் , 25 ஆம் திகதி கொழும்பு பாதுகாப்பு சேவை கல்லூரியிலும் , 26 ஆம் திகதி ஹோலி பெமிலி வித்தியாலயத்திலும் , 27 ஆம் திகதி டீ.எஸ்.சேனாநாயக்க வித்தியாலயத்திலும் , 28 ஆம் திகதி முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்திலும் , 29 ஆம் திகதி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியிலும் , 30 ஆம் திகதி மஹாநாம வித்தியாலயத்திலும் , 31 ஆம் திகதி மீண்டும் ஆனந்தா வித்தியாலயத்திலும் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.
இதேபோன்று பெப்ரவரி முதலாம் திகதி புனித ஜோசப் கல்லூரியிலும் , 2 ஆம் திகதி கோதமி வித்தியாலயத்திலும் , 3 ஆம் திகதி சாஹிரா வித்தியாலயத்திலும் , 5 ஆம் திகதி புனித பீட்டர் வித்தியாலயத்திலும் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. அதற்கமைய பெப்ரவரி 5 ஆம் திகதியுடன் முதலாம் கட்டம் நிறைவடைகிறது.
இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் உயர்தர பரீட்சை நிலையங்கள் அல்லாத பாடசாலைகளில் இடம்பெறும். மார்ச் 3 ஆம் திகதிக்கு பின்னர் எஞ்சிய சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM