(எஸ்.என்.நிபோஜன்,ஆர்.வி.கே)
கிளிநொச்சி யூனியன்குளம் காட்டுப்பகுதியில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு இன்று விறகு வெட்டச் சென்றவர்களால் கிளிநொச்சிப் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து குறித்த காட்டுப் பகுதிக்குச் சென்ற கிளிநொச்சிப் பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் முதலாம் கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஓர் ஆண் எனவும் அவர் தன்வசம் வைத்திருந்த பொருட்களை பார்க்கும் போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர் .
குறித்தசடலமானது யூனியன்குளம் மக்கள் குடியிருப்பில் இருந்து பல கிலோமீற்றர் தொலைவில் காட்டுப்பகுதியில் உருக்கிலைந்த நிலையில் காணப்படுகின்றது.குறித்த பகுதியில் மண்ணகழ்வு மற்றும் மரங்கடத்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் நடைபெறுவதற்கான தடையங்களும் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் கிளிநொச்சி குற்றத்தடயவியல் பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சோதனைகளையும் விசாரணைகளையும் ஆரம்பிக்க இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM