(எஸ்.என்.நிபோஜன்)
வவுனியா ஏ 9 பாதையில் வைத்து சட்டவிரோதமாக கொழும்புக்கு கடத்தப்பட்ட 102 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சோமரத்தின விஜியமுனி தெரிவித்தார்.
குறித்த சந்தேக நபரை பொலிஸார் இன்று அதிகாலை வவுனியா ஏ 9 பாதையில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்து கைதுசெய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியிலிருந்து கொழும்புக்கு கொண்டுசெல்வதற்காக 'டொல்பின்' ரக வேன் ஒன்றில் குறித்த கேரள கஞ்சாவினை கடத்திச்சென்ற போதே சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் 1.5 கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்த சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM