(எம்.மனோசித்ரா)
இலங்கையில் தொழில்சார் கல்வி மற்றும் பயிற்சி துறையில் முன்முயற்சிகளுக்கு விரிவான உதவிகளை வழங்குவது குறித்து கொரியா பரிசீலிக்கும் என்று அந்நாட்டு பிரதி பிரதமரும் கல்வி அமைச்சருமான யூ யூன் ஹை தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிசுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே, கொரிய பிரதி பிரதமர் யூ யூன் ஹை இதனைத் தெரிவித்தார்.
கொய்க்கா மற்றும் கொரிய எக்சிம் வங்கி ஆகிவற்றின் தலைமையிலான வெளிநாட்டு அபிவிருத்தி உதவிகள் போன்று இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்புக்கள் குறித்து அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதன் போது தெரிவித்தார். இந்த வேலைத்திட்டங்களினால் இலங்கைக்கு கிடைத்த நன்மைகள் குறித்து அமைச்சர் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
கொரியாவில் பணிபுரியும் 22 000 இலங்கையர்கள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் பீரிஸ் , இலங்கையில் கொரிய மொழியின் புலமையை நோக்கமாகக் கொண்ட கற்பித்தல் நிகழ்ச்சிகளின் பிரபல்யம் குறித்து சுட்டிக்காட்டினார்.
2023 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் கொரிய மொழி ஒரு பாடமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த கொரிய பிரதி பிரதமர் யூ யூன் ஹை, இலங்கையில் தொழில்சார் கல்வி மற்றும் பயிற்சி துறையில் முன்முயற்சிகளுக்கு விரிவான உதவிகளை வழங்குவது குறித்து கொரியா பரிசீலிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM