(எம்.ஆர்.எம்.வசீம்)
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்ற ஜனாதிபதியின் வாக்குறுதிக்கமைய அரசாங்கம் அரசியலமைப்பு தொடர்பான வரைபொன்றையாவது எதிர்வரும் சுதந்திர தினத்தில் நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும் என முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவருமான கருஜயசூரிய தெரிவித்தார்.
சமூக நீதிக்கான தேசிய அமைப்பு நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கத்தை அமைத்து ஒருவருடத்துக்குள் ஜனநாயக ரீதியிலான புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதாக ஜனாதிபதி நாட்டுக்கு மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அதுதொடர்பான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனால் மேலும் காலதாமதிக்காமல் விரைவாக முன்னெடுக்கவேண்டும்.
அதற்காக எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தில் புதிய அரசியலமைப்பின் வரைபையாவது நாட்டு மக்களுக்கு அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும்.
அத்துடன் அரசியலமைப்பு மக்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதுடன் பாராளுமன்றம் மற்றும் மக்களின் ஆதரவு இல்லாமல் மேற்கொள்ளப்படும். அரசியலமைப்பை மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை அரசாங்கம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
மேலும், இந்த அரசாங்கம் அதிகாரத்துக்குவந்து 20ஆவது திருத்தத்தை சமர்ப்பித்த தினத்தில் இருந்து, அதனால் நாட்டுக்கு ஏற்படப்போகும் பாதிப்பு மற்றும் ஜனநாயக முழுமையாக அழிவடைவது தொடர்பாக நாங்கள் முழு நாட்டுக்கும் எடுத்துக்காட்டினோம்.
இறுதியில் 20ஆவது திருத்தம் மற்றும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தினால் நாட்டுக்கு ஏதாவது நன்மை கிடைத்ததா என கேட்கின்றேன். மாறாக 20ஆவது திருத்தம் நகைச்சுவையாகவே அமைந்திருக்கின்றது.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன 20ஆவது திருத்தத்தின் விளைவுகளை சுட்டிக்காட்டி இருந்தார்.
ஆளும் அரசாங்கத்தின் பங்காளியாக இருந்து, இவ்வாறான கருத்தை தெரிவித்திருப்பது ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கானதொரு பெரும் சக்தியாகும். அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.
எனவே பல்வேறு காரணங்களை தெரிவித்துக்கொண்டு தொடர்ந்தும் காலதாமதிக்காமல், வாக்குறுதி அளித்த பிரகாரம் அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு வரைபையாவது பெப்ரவரி 4ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம்.
அதேபோன்று இரட்டை பிரஜா உரிமை தொடர்பாக ஜனாதிபதியினால் நாட்டு மக்களுக்கு ராஜதந்திர ரீதியிலான வாக்குறுதி ஒன்று வழங்கப்பட்டிருக்கின்றது.
அந்த கால எல்லை தற்போது முடிவடைந்திருக்கின்றதை மிகவும் தாழ்மையுடன் நினைவுபடுத்துகின்றோம். இந்த வாக்குறுதி ஜனாதிபதியினால் சபைக்கும் அளிக்கப்பட்டிருக்கின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM