(எம்.எப்.எம்.பஸீர்)
வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் சமூக படு கொலைகள் தொடர்பிலான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பதாக, அவ்வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான முன்னாள் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியூமால் ரங்க ஜீவவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
6 ஆம் திகதி அவ்வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்த நிலையில் (தற்போது 12 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது) நேற்று ( 5) ஆம் திகதி இந்த பதவி உயர்வுக்கான உத்தரவை பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன பிறப்பித்துள்ளார்.
அதன்படி தற்போது பொலிஸ் மேலதிக படைப் பிரிவில் பொலிஸ் பரிசோதகராக இருக்கும் நியூமால் ரங்க ஜீவ, 2020 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பிரதான பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்த்தப்படுவதாக பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.
நீண்ட நாட்களாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் முகமாக இந்த பதவி உயர்வு வழங்கப்படுவதாக பொலிஸ் மா அதிபரின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை விவகாரத்தில், முன்னால் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியூமால் ரங்க ஜீவ மற்றும் மெகஸின் சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சர் லமாஹேவகே எமில் ரஞ்சன் ஆகியோருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீதிமன்றினால் நேற்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM