மரணத்தில் சந்தேகம் : உறவினர்கள் நீதிமன்றில் மனுத்தாக்கல்

Published By: Digital Desk 3

06 Jan, 2022 | 12:08 PM
image

கடந்த செப்ரம்பர் மாதம் மர்மமான முறையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் போராளியான மாணிக்கம் ஜெயக்குமாரின் (ஆதவன்) மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நேற்றுமுன்தினம் (04) மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் விண்ணப்பம் ஒன்று செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாயை சேர்ந்த, இரு பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த 2021 செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி காலை 6 மணியளவில், வழமைபோல நடைப்பயிற்சிக்கு செல்வதாகக்கூறி வெளியே சென்றுள்ளார், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

பின்னர் 2021 செப்டம்பர் 30ஆம் திகதி மாலை குறித்த நபர் நவாலிப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அப்போதே, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவருடைய நண்பர்கள் தெரிவித்த போதிலும், குடும்பத்தினர் தமது பாதுகாப்பு கருதி இது தொடர்பாக எந்த கருத்தும் வெளியிடவில்லை.

இருப்பினும், இவருடைய வீட்டுக்கும் இவர் சடலமாக மீட்கப்பட்ட பகுதிக்கும் இடையில் நெடுந்தூரம் காணப்பட்டதையடுத்து, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனால் இவருடைய உடல் நீதிமன்ற கட்டளையின் படி உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் தகனம் செய்யப்படாமல் புதைக்கப்பட்டது.

விசாரணைகள் இடம்பெற்று குறித்த வழக்கு எதிர்வரும் 10ஆம் திகதி நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட திகதியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதனால் இவர் தனது உயிரை மாய்த்திருக்கலாம் என பல செய்திகள் பரப்பப்பட்டிருத்ததை தற்போது அறிந்த குடும்பத்தினர் அதை முற்றிலும் மறுத்துள்ளனர்.

அவர் நல்ல சுகதேகியாக இருந்தார் என்றும், தவறான முடிவு எடுக்கும் நிலையில் அவர் இருக்கவில்லை என்றும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில், குறித்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என நேற்று மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு 10ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளதால், அன்றைய தினம் இவ்விண்ணப்பம் தொடர்பான நடவடிக்கைக்காக இன்று தவணையிடப்பட்டுள்ளது.

உறவினர்கள் சார்பாக சட்டத்தரணி எம். திருக்குமரன் மன்றில் விண்ணப்பம் செய்திருந்தார்.

இவர் 1994 முதல் 2009 வரை விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்ததுடன், அரசியல் துறையின் நிதி தொடர்பான விடயங்களில் பொறுப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:51:03
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

கடத்தப்பட்டு மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும்...

2024-04-18 16:57:33