கடந்த செப்ரம்பர் மாதம் மர்மமான முறையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் போராளியான மாணிக்கம் ஜெயக்குமாரின் (ஆதவன்) மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நேற்றுமுன்தினம் (04) மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் விண்ணப்பம் ஒன்று செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாயை சேர்ந்த, இரு பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த 2021 செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி காலை 6 மணியளவில், வழமைபோல நடைப்பயிற்சிக்கு செல்வதாகக்கூறி வெளியே சென்றுள்ளார், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
பின்னர் 2021 செப்டம்பர் 30ஆம் திகதி மாலை குறித்த நபர் நவாலிப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அப்போதே, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவருடைய நண்பர்கள் தெரிவித்த போதிலும், குடும்பத்தினர் தமது பாதுகாப்பு கருதி இது தொடர்பாக எந்த கருத்தும் வெளியிடவில்லை.
இருப்பினும், இவருடைய வீட்டுக்கும் இவர் சடலமாக மீட்கப்பட்ட பகுதிக்கும் இடையில் நெடுந்தூரம் காணப்பட்டதையடுத்து, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதனால் இவருடைய உடல் நீதிமன்ற கட்டளையின் படி உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் தகனம் செய்யப்படாமல் புதைக்கப்பட்டது.
விசாரணைகள் இடம்பெற்று குறித்த வழக்கு எதிர்வரும் 10ஆம் திகதி நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட திகதியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதனால் இவர் தனது உயிரை மாய்த்திருக்கலாம் என பல செய்திகள் பரப்பப்பட்டிருத்ததை தற்போது அறிந்த குடும்பத்தினர் அதை முற்றிலும் மறுத்துள்ளனர்.
அவர் நல்ல சுகதேகியாக இருந்தார் என்றும், தவறான முடிவு எடுக்கும் நிலையில் அவர் இருக்கவில்லை என்றும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில், குறித்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என நேற்று மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு 10ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளதால், அன்றைய தினம் இவ்விண்ணப்பம் தொடர்பான நடவடிக்கைக்காக இன்று தவணையிடப்பட்டுள்ளது.
உறவினர்கள் சார்பாக சட்டத்தரணி எம். திருக்குமரன் மன்றில் விண்ணப்பம் செய்திருந்தார்.
இவர் 1994 முதல் 2009 வரை விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்ததுடன், அரசியல் துறையின் நிதி தொடர்பான விடயங்களில் பொறுப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM