ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு 'போதையற்ற தேசத்திற்கான சுதந்திரப் போராட்ட முன்னோடி' விருது 

Published By: Digital Desk 2

06 Jan, 2022 | 12:01 PM
image

ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு 'போதையற்ற தேசத்திற்கான சுதந்திரப் போராட்ட முன்னோடி' எனும் விருது புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ளது.

புகையிலை, புகைப்பிடித்தல் மற்றும் மதுசாரம் தொடர்பில் அச்சு, இலத்திரனியல் மற்றும் இணையத்தள ஊடகங்கள் ஊடாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த உழைத்து வரும் ஊடகவியலாளர்கள் இந்த அதிகார சபையினால் வருடாந்தம் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றார்கள்.

இதற்கமைய 2021 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நடைபெற்றது.

இதன்போது, விடியல் இணையத்தளத்தின் ஆசிரியர் றிப்தி அலிக்கு தமிழ் மொழிக்கான விருது சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவினால் வழங்கப்பட்டது. 

புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ். மரியன்னை...

2024-03-29 15:38:31
news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56