ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு 'போதையற்ற தேசத்திற்கான சுதந்திரப் போராட்ட முன்னோடி' எனும் விருது புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ளது.
புகையிலை, புகைப்பிடித்தல் மற்றும் மதுசாரம் தொடர்பில் அச்சு, இலத்திரனியல் மற்றும் இணையத்தள ஊடகங்கள் ஊடாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த உழைத்து வரும் ஊடகவியலாளர்கள் இந்த அதிகார சபையினால் வருடாந்தம் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றார்கள்.
இதற்கமைய 2021 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நடைபெற்றது.
இதன்போது, விடியல் இணையத்தளத்தின் ஆசிரியர் றிப்தி அலிக்கு தமிழ் மொழிக்கான விருது சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவினால் வழங்கப்பட்டது.
புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM