கிளிநொச்சி பரந்தனில் புத்தாண்டு தினத்தில் இளைஞர் படுகொலை - இருவருக்கு விளக்கமறியல்

Published By: Digital Desk 4

05 Jan, 2022 | 11:17 PM
image

கிளிநொச்சி பரந்தன் பகுதியில்  புத்தாண்டு தினத்தில்  இளைஞர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் நேற்றுக் கைது செய்யப்பட்ட  சந்தேக நபரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில் புத்தாண்டு தினமான முதலாம் திகதி இரவு கூரிய ஆயுதத்தால்  குத்தி இளைஞர்  ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அத்துடன் மேலுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தி சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்யவில்லையெனத் தெரிவித்து  குறித்த இளைஞனின் கொலைக்கு நீதி கோரி பரந்தன் வர்த்தகர்கள்  கடந்த  (03-01-2022) முழுகடையடைப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.  

தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்து குற்ற செயல்களை கட்டுப்படுத்துமாறு கோரி நேற்று (04-01-2022) உயிரிழந்த இளைஞனின்  சடலத்தை வீதியில் வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொலிசாரின் வாக்குறுதியை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

குறித்த குற்றவாளிகளை கைது செய்ய பொலிசார் நடவடிக்கை எடுத்து ஏற்கனவே ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 12ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டள்ளது. 

இதே நேரம் நேற்றுக் கைது செய்யப்பட்ட மற்றுமொரு ,சந்தேக  நபரை கிளிநொச்சி பொலிசார் இன்று (05-02-2022) பிற்பகல் 2 மணியளவில் கிளிநொச்சி  மாவட்ட நீதிவான் நீதி மன்றில்  நீதிமன்ற நீதிவான்  லெனின்குமார் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியதையடுத்து எதிர்வரும் 12ஆம் திகதி வரை அவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58